கோவை மாவட்டம் வீரகேரளத்தில் இருந்து சௌரிபாளையம் வரை செல்லும் வேலவன் தனியார் பேருந்தின் உரிமையாளர் கே. சுப்பிரமணியத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று ஒரு நாள் முழுவதும் பேருந்தில் பயணம் செய்யும் அனைவருக்கும் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பயணம் அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் மக்கள் அனைவரும் சுப்பிரமணியத்தின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.