வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

61பார்த்தது
வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
கோவை மருதமலை அடிவாரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் அப்பகுதியில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அவரது மகன் மனோஜ்குமார்(22), நேற்று வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கரும்பு ஜூஸ் வாங்கி குடித்தார். பின்னர் பணம் கொடுக்காமல், மனோஜ் குமாரிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி கடையின் கல்லாவில் இருந்த ரூ. 300 ஐ பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பணம் மிரட்டி பறித்தது வேடப்பம்பட்டியை சேர்ந்த தீபக்(22), என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி