பொள்ளாச்சி - Pollachi

கோவை: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு துணை மருத்துவப் படிப்பு படித்து வந்த அனுப்பிரியா (18) என்ற மாணவி கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் விடுதியில் தங்கிப் படித்து வந்தார். சம்பவத்தன்று, காணாமல் போனதாகக் கூறப்பட்ட ரூ. 1,500 தொடர்பாக பேராசிரியர்கள் அனுப்பிரியாவை ஐந்தாவது மாடியில் வைத்து விசாரித்துள்ளனர். அவர் பணத்தை எடுக்கவில்லை என்று மறுத்த நிலையில், அவரை விடுதிக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர்.  சோகத்துடன் திரும்பிய அனுப்பிரியா 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தார். இதையடுத்து, சக மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  அனுப்பிரியாவின் தாயார் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது. சக மாணவர்கள், உறவினர்கள் நேற்று உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் போலீசார் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.  அனுப்பிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அனுப்பிரியாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా