கோவை: அவதூறு வழக்கு- பழனிசாமிக்கு தண்டனை கிடைக்கும்!

76பார்த்தது
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கில், உரிய தண்டனை கிடைக்கும் என்று முன்னாள் அதிமுக நிர்வாகி கே. சி. பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கே. சி. பழனிசாமி, கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தெருவில் செல்பவர் என்றும் தன்னை விமர்சித்ததாகக் கூறினார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், உயர் நீதிமன்றம் குற்ற வழக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தன்னை வேண்டுமென்றே அவதூறு செய்யும் வகையில் மீண்டும் பேசியதாக கே. சி. பழனிசாமி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், சட்டமன்ற கூட்டத்தொடர் காரணமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார்.
இதுகுறித்து கே. சி. பழனிசாமி கூறுகையில், இந்த வழக்கில் உரிய தண்டனை வழங்கப்படும் என நம்புகிறேன் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி