வீடு வீடாக சென்று நன்றி தெரிவித்த எம்பி

62பார்த்தது
மாண்புமிகு. கழகத் தலைவர், திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்களின் திமுக மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40/40 மாபெரும் வெற்றியைப் பெற்றதை முன்னிட்டு பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்ற கே. ஈஸ்வரசாமி எம்பி. , அவர்கள், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட , குறிச்சி வடக்கு தெற்கு , மற்றும் வெள்ளலூர் பேரூராட்சி உள்ள பொதுமக்களை வீடுவீடாக சென்று சந்தித்து தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்தார். கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேஷன் முன்னிலையில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் குறிச்சி வடக்கு பகுதி கழக செயலாளர் S. A. காதர், கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர்கள் குறிச்சி பிரபாகரன், ஆச்சிபட்டிபாலு, தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன், வட்டக்கழக செயலாளர் முத்தலி அணிகளின் துணை அமைப்பாளர் கோவை சாதிக், டிஷ்கோஹம்சா, காஜா, வைத்தியர் சக்திவேல் மாமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா , பழனிச்சாமி, உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் இந்தியா கூட்டணியின் செயல்வீரர்களும், கழக தொண்டர்களும், திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி