கோவை மாநகராட்சி திமுக மேயர் திடீர் ராஜினாமா..!

66பார்த்தது
கோவை மாநகராட்சி திமுக மேயர் திடீர் ராஜினாமா..!
சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இங்கு 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த கல்பனா மேயராக பதவியேற்றார். ஆரம்பம் முதலே அவர் மீது பல புகார்கள் எழுந்து வந்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் அவரை பதவி விலகுமாறு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையரிடம் கடிதத்தை கல்பனா வழங்கி உள்ளார். அவரது கடிதத்தை மாநகராட்சி ஆணையர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி