வழக்கறிஞர்கள் இடையே மோதல்: 21 பேர் மீது வழக்குப்பதிவு!

79பார்த்தது
சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் நாற்காலிகளை வீசி எறிந்து இருதரப்பு வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் எழும்பூர் காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி