கணவரின் கள்ளக்காதலியை கொன்ற மனைவி

10053பார்த்தது
கணவரின் கள்ளக்காதலியை கொன்ற மனைவி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹிருஷிகேஷைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித் - பபிதா தம்பதி. ரஞ்சித்துக்கும், அனிதா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ரஞ்சித் தனது மனைவி பபிதாவை அடிக்கடி அடித்து வந்துள்ளார். இதனால், பபிதா தனது நண்பர்களுடன் சேர்ந்து அனிதாவை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, கடந்த மே 25ஆம் தேதி அன்று அனிதாவை கோயிலுக்கு வருமாறு பபிதா அழைத்தார். அதன் பேரில் கோயிலுக்கு வந்த அனிதாவை பபிதா கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பபிதா மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி