"நாங்குநேரி மாணவனுக்கு முதலமைச்சர் உதவ வேண்டும்"

55பார்த்தது
"நாங்குநேரி மாணவனுக்கு முதலமைச்சர் உதவ வேண்டும்"
கடந்த ஆண்டு ஆகஸ்டு 12,2023 அன்று உடன் படித்த மாணவர்களால் வெட்டப்பட்ட நாங்குனேரி மாணவன் சின்னத்துரை பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் கைகள் வெட்டப்பட்டு பாதிக்கப்பட்ட சூழலிலும் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தனது எக்ஸ் பக்கத்தில், கல்வி கற்க கூடாது என எத்தனை தடைகள்,‌ அடக்குமுறை நடத்தினாலும் அதை உடைத்து எழுவேண்டும் என்பதையே சின்னத்துரை உணர்த்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ தம்பி சின்னத்துரை விரும்பும் படிப்பை தொடர உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி