சென்னை நுங்கம்பாக்கம் லேக் வியூ அவென்யூ பகுதியில் வசிப்பவர் அபுபக்கர். இவர் துபாயில் டிரேடிங் நிறுவனம் தொழில் செய்து வருகிறார். மேலும் இரண்டு அடுக்குமாடிகள் கொண்ட வீட்டின் முதல் மாடியில் இவர் வசித்து வருகிறார். 2-வது மாடி வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். தனது மாமனார் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ஆங்கில புத்தாண்டு விடுமுறைக்காக கடந்த டிசம்பர் மாதம் சொந்த ஊரான ராமநாதபுரம் கீழக்கரைக்கு சென்றனர். ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த சுமார் ரூ. 2 கோடிக்கும் மேலான தங்க, வைர நகைகள், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் எப்படி வீட்டிற்குள் வந்தனர்? எப்படி தப்பிச் சென்றார்கள்? என்பது குறித்து ஆய்வு செய்தனர். கொள்ளையர்கள் வீட்டின் நுழைவு கதவு வழியாக ஏறி முதல் மாடிக்கு சென்று கைவரிசை காட்டியிருப்பதாக போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணையை போலீசார் முடுக்கி விட்டனர். இந்த நிலையில் கொள்ளை தொடர்பாக அந்த வீட்டின் கார் ஓட்டுனரான சந்திரபரியார் என்பவரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.