சென்னை:
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு ஆஜராக வேண்டும் என போக்குவரத்துத்துறை ஆணை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு ஆஜராக வேண்டும்.
பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு, போன்ற எந்த விடுப்புகளையும் பணியாளர்கள் எடுக்கக் கூடாது.
சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.