அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

1533பார்த்தது
வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுகளையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடிமை வம்சத்தில் இருந்து வந்த உங்களைப் பற்றியும் நாங்கள் விமர்சிக்க நேரிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் பேரியக்கம், திமுகவுக்கு அடிமையாக இருப்பதாக அண்ணாமலை பேசியுள்ளார். இது போன்ற வெறுப்பு அரசியலை, அவதூறு பேச்சுக்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிருங்கேரி மடத்தின் ரகசியத்தை நாங்கள் வெளியிடுவோம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி