திரு.வி.க. நகர் - Thiru vi ka nagar

கத்திபாரா மேம்பாலத்தில் நவீன சிக்னல்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

கத்திபாரா மேம்பாலத்தில் நவீன சிக்னல்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

சென்னை கிண்டியில் இருந்து ஆலந்தூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர் மற்றும் மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின்கீழ் வழியாக செல்ல வேண்டியுள்ளது. மேலும், அங்குள்ள சர்வீஸ் சாலை வழியே பூந்தமல்லி, கிண்டி போன்ற பகுதிகளுக்கு செல்லவேண்டிய பைக் மற்றும் இலகுரக வாகன ஓட்டிகளும் கடந்து செல்ல பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஆலந்தூர் புதுத் தெருவில் இருந்து ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்பவர்களும் கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள பிரதான சாலையைப் பயன்படுத்துகின்றனர். அங்கு போக்குவரத்து சிக்னல் இல்லாததால், நாள்தோறும் அனைத்து வாகனங்களும் குறுக்கும் நெடுக்குமாக கடந்து செல்லும்போது, நெரிசலும் விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகின்றன. இங்கு ஒருசில நேரங்களில் போக்குவரத்து போலீசார் வெறுமனே நிற்கின்றனர். பல நேரங்களில் அதுவும் இருப்பதில்லை. இதனால் அங்கு நடைபெறும் வாகன விபத்துகளில் பலர் அடிபட்டு வருகின்றனர். எனவே, கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஆலந்தூர், புதுத் தெரு மற்றும் ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் புதிதாக நவீன போக்குவரத்து சிக்னல் அமைத்து தரவேண்டும் என்று அனைத்து வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்.

வீடியோஸ்


சென்னை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு
Sep 18, 2024, 14:09 IST/எழும்பூர்
எழும்பூர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு

Sep 18, 2024, 14:09 IST
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்யக் கோரி, தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதி வேண்டி, தலைமைச் செயலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் முதல்வரின் தனிச் செயலரை இன்று (செப்.,18) சந்தித்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை 5ம் மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தற்போது வரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், தொடர்புடைய நபர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டு தலைமறைவாக உள்ள நபர்களை விரைந்து கைது செய்யக்கோரி தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதி வேண்டி தலைமை செயலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் முதலமைச்சரின் தனி செயலரை சந்தித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் காவல்துறையின் விசாரனையில் தங்கள் கட்சிக்கு திருப்தியில்லை என தெரிவித்தார்.