சென்னையில் பெட்ரோல் குண்டு வீச்சு

67பார்த்தது
சென்னையில் பெட்ரோல் குண்டு வீச்சு
அண்ணாநகரில் உள்ள அன்னை சத்யா நகரில் 2 வெவ்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர காம்பவுண்டு சுவரில் பெட்ரோல் குண்டு வீசிய பாலமுரளி மன நலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய பாலமுரளியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பாலமுரளி மீது ஏற்கெனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தொடர்புடைய செய்தி