தாழ்வுநிலை பகுதி வலுவடைந்து: வானிலை ஆய்வு மையம்

58பார்த்தது
தாழ்வுநிலை பகுதி வலுவடைந்து: வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருகிறது. தமிழகத்தில் மிதமான மழை தொடரும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக்கடலில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும்.

அடுத்த இரண்டு நாட்களில், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி நகரலாம்.

வங்கக்கடலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், மணிக்கு 40 கி. மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசுவதுடன், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி