3400 போதை மாத்திரைகள் பறிமுதல்: வெளிநாட்டவர்கள் கைது

64பார்த்தது
3400 போதை மாத்திரைகள் பறிமுதல்: வெளிநாட்டவர்கள் கைது
அமைந்தகரை சுற்று வட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திரு. வி. க. , பூங்கா அருகில் போலீசார் கண்காணித்தனர். அங்கு இருவர், போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்க முயன்றது தெரிந்தது. போலீசார் அவர்களை பிடித்து சோதித்த போது, அவர்களிடம் 3400 மாத்திரைகள் சிக்கின.

விசாரணையில் அவர்கள், நேபாள நாட்டை சேர்ந்த பிரகாஷ் கத்தி கிருஷ்ண ஷர்மா வெளிநாட்டவர்கள் என்பதும், ஆவடி அடுத்த பட்டாபிராமிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கி வேலை செய்வதும் தெரிந்தது. அவர்களிடமிருந்து, 3400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி