பெரம்பூர் - Perambur

சென்னை: நேப்பியர் பாலத்தில் அனமார்க் கலை ஓவியம்

சென்னை: நேப்பியர் பாலத்தில் அனமார்க் கலை ஓவியம்

சென்னை நேப்பியர் பாலத்தில், 'அனமார்பிக்' கலையை பயன்படுத்தி, விளையாட்டு வீரர்களின் ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தப்பட்டு வருகிறது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, நடப்பாண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், செப். , 10 முதல் நடந்து வருகின்றன. பல்வேறு நகரங்களில், வரும் 24ம்தேதி வரை நடக்கவுள்ளது. இதையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தில், 'அனமார்பிக்' முறையில், விளையாட்டு ஓவியங்களை வரைந்து, அழகுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அனமார்பிக் கலை, 15ம் நுாற்றாண்டில் இருந்தே உள்ளது. இந்த கலையை பயன்படுத்தி, நேப்பியர் பாலத்தின் அரை சக்கர வடிவிலான துாண்களில், கிரிக்கெட், கால்பந்து, சிலம்பம், குத்துசண்டை, ஓட்ட பந்தயம், கபடி, பேட்மின்டன், டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. துாரத்தில் இருந்து பார்க்கும்போது, இந்த படங்கள் முழுமையாக தெரிகின்றன. அருகே வரும்போது ஓவியங்கள் சிதைந்துள்ளது போன்று தெரிகின்றன.

வீடியோஸ்


சென்னை