அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

67பார்த்தது
அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
சென்னை மாநகராட்சியின் 871 பூங்காக்களிலும் நேற்று தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பூங்காக்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அந்த விவரங்களை மாநகராட்சி பூங்கா துறைக்கு அனுப்புமாறு மேயர் ஆர். பிரியா, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சென்னை மாநகராட்சியில் 418 கிமீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இவற்றில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சீராக செல்வதற்கும், நடைபாதைகளில் மக்கள் சிரமமின்றி செல்வதற்கும் ஏற்ப, ஆணையர் ஜெ. குமரகுருபரன் உத்தரவின்படி, கடந்த ஜூலை 22-ம் தேதி இரவு முதல் மாநகராட்சி சார்பில் இரவு நேர தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

பிரதான சாலைகளில் தூய்மைப் பணி நிறைவுற்ற நிலையில் உட்புற சாலைகளிலும் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் 1, 265 பேருந்து நிறுத்தங்களில் கடந்த ஆக. 21-ம் தேதி தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி