பானிபூரியில் வேதிப்பொருள் கலக்கப்பட்டால் நடவடிக்கை

66பார்த்தது
பானிபூரியில் வேதிப்பொருள் கலப்பு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்திலும் ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளில் சோதனையிட்ட அதிகாரிகள் சுகாதாரமான முறையில் பானிபூரி விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையிட்டனர். மேலும், மாதிரிகளை சேகரித்து ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள், வேதிப்பொருள் கலப்பு உறுதி செய்யப்பட்டால், அதனை விற்ற கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி