ஆவணி அவிட்டம் என்பது சமஸ்கிருதத்தில் உபாகர்மா என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ’தொடக்கம்’ என்பதாகும். இன்றைய தினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் எனக் கூறுவார்கள். கல்வி கற்பதை தொடங்குவதற்கான ஒரு முக்கியமான நாளாகவும் இது கருதப்படுகிறது. ஆவணி அவிட்டத்தில் காயத்ரி மந்திரம் சொல்வதோடு, வயதில் மூத்தவர்களிடம் வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் காணிக்கைகள் கொடுத்து ஆசீர்வாதம் பெறுவது வாழ்வில் உயர்வதற்கு வழிவகுக்கும்.