அக்னிபாத் திட்டத்தில் மாற்றங்கள்..?

61பார்த்தது
அக்னிபாத் திட்டத்தில் மாற்றங்கள்..?
மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 25 சதவீத வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சதவீதத்தை அதிகரிக்க உள்ளதாகவும், வீரர்களின் சம்பளம் மற்றும் உரிமைகள் உள்ளிட்டவைகளில் மாற்றங்கள் கொண்டு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அக்னிபாத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ள இருப்பதாக பாதுகாப்புத்துறை சார்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி