தமிழ்நாட்டில் தீபாவளி வரை கனமழைக்கு வாய்ப்பு

61பார்த்தது
தமிழ்நாட்டில் தீபாவளி வரை கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (அக்.25) முதல் வருகிற அக்.31ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி