சான்ட்னர் சுழலில் சிக்கித் தடுமாறும் இந்திய அணி

78பார்த்தது
சான்ட்னர் சுழலில் சிக்கித் தடுமாறும் இந்திய அணி
புனேவில் தொடங்கிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 16 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்திருந்தது. இன்று தொடங்கிய 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. உணவு இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்துள்ளது. நியூசி பந்துவீச்சில் அதிகபட்சமாக மிட்சல் சான்ட்னர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்புடைய செய்தி