மதுரையில் பாதுகாப்பாக தரையிறங்கிய 2 விமானங்கள்

53பார்த்தது
மதுரையில் பாதுகாப்பாக தரையிறங்கிய 2 விமானங்கள்
மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் வெகு நேரமாக வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன. சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து மதுரை வந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாமல் சுமார் அரை மணி நேரமாக வானில் வட்டமடித்தன. தற்போது வானிலை சரியான நிலையில் விமானங்கள் தரையிறங்கின.

தொடர்புடைய செய்தி