தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக தேமுதிக கட்சி பொது செயலாளர் பிரேமலதா மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி புகார் அளித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சி வழங்க டோக்கன் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.