மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் பிரதமர் மோடி வல்லவர் என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பணமதிப்பிழப்பு-ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான தொழில்கள் அழிந்துள்ளன. இவை அனைத்திலிருந்தும் கவனத்தை திசை திருப்புவதில் பிரதமர் கைதேர்ந்தவர்” என்று தனது x பதிவில் விமர்சனம் செய்துள்ளார்.