கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சில மாதங்களாக சுற்றித்திரிந்து வந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு வெளியே சென்றது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த அந்த முதியவர் சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் தலைவைத்து படுத்தார். அவர் மீது பேருந்து ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.