தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு ரத்து

59434பார்த்தது
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கு ரத்து
நடிகர் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில், புகைபிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறாமல், விதிகளை மீறியதாக தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரி தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். புகார் தருவதற்கு முன்பு விளக்கம் தர எந்த ஒரு வாய்ப்பையும் வழங்கவில்லை என்றும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்த நிலையில், தற்போது இவ்வழக்கு ரத்து செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி