கார் டயர் வெடித்து விபத்து, போலீஸ்காரர் மனைவியுடன் பலி!

115845பார்த்தது
கார் டயர் வெடித்து விபத்து, போலீஸ்காரர் மனைவியுடன் பலி!
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (32) சங்கர் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி வினோதினி (30) உடன், கரூரில் வினோதினியின் தாய் வீட்டிற்கு காரில் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். இரவு 10.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேம்பாலத்தில் வந்த போது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதியது. அப்போது திருச்சி நோக்கி சென்ற மற்றொரு கார் மீதும் மோதியது. இதில் பாலமுருகன், அவரது வினோதினி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த 4 பேர் பலத்த காயமடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி