கர்நாடகா: சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த மெளலா அப்துல், தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மையத்தடுப்பில் மோதி 15 முறை சுழன்று அடித்து எதிர்திசையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மௌலா மற்றும் அவரது 2 மகன்கள் உயிரிழந்தனர். அவரது மனைவி, தாய், மற்றொரு மகன் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.