CAA - முதற்கட்டமாக 300 பேருக்கு குடியுரிமை

85பார்த்தது
CAA - முதற்கட்டமாக 300 பேருக்கு குடியுரிமை
சிஏஏ சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நேற்று (மே 15) 300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில், 14 பேருக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் இந்திய குடியுரிமை சான்றிதழை நேரில் வழங்கி இருக்கிறார். முன்னதாக, சிஏஏ சட்டத்திற்கு எதிராக பலரும் கண்டனம் எழுப்பி வந்தனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ சட்டத்திற்கு தடை கொண்டு வரப்படும் என ராகுல் காந்தியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூறி வரும் நிலையில் தற்போது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி