காருக்குள் 3 சடலங்கள் - போலீசார் விசாரணை

18487பார்த்தது
காருக்குள் 3 சடலங்கள் - போலீசார் விசாரணை
தேனி - கம்பம் மெட்டு சாலையில் உள்ள ஓடைப்பகுதியில் இன்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. இதனை கவனித்த அப்பகுதியினர் காரின் அருகே சென்று பார்த்த போது அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காரில் இருந்த 3 சடலங்களை மீட்டனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி