ரக்‌ஷா பந்தன் நாளில் சகோதரியை குத்திக் கொன்ற சகோதரன்

67பார்த்தது
ரக்‌ஷா பந்தன் நாளில் சகோதரியை குத்திக் கொன்ற சகோதரன்
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அசுதோஷ் பாணிகிரஹி (14). இவருக்கு ப்ரஜுக்தா பாணிக்ரஹி (13) என்ற சிறுமி சகோதரி முறையாவார். இன்று (ஆகஸ்ட் 19) உறவினர் ஒருவரின் துக்க நிகழ்விற்கு குடும்பத்தாருடன் இருவரும் சென்றனர். அங்கு சிறுவன் அசுதோஷ் ப்ரஜுக்தா மற்றும் மற்றொரு சகோதரரை கத்தியால் குத்தினார். இதில் ப்ரஜுக்தா உயிரிழந்தார். கத்திக்குத்துப்பட்ட மற்றொரு நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி