BREAKING: பிரதமர் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவு

61பார்த்தது
BREAKING: பிரதமர் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவு
கோவையில் வரும் 18-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வாகன பேரணிக்கு அனுமதியளித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரணிக்கு அனுமதி கோரி கோவை மாவட்ட பாஜக சார்பில் தொடரப்பட்ட மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பிரதமருக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மத மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. சாலையில் 4 கி.மீ. தூரத்திற்கு பேரணி நடக்கும் போது ஒவ்வொரு தனி நபரையும் சோதனை செய்வது கடினமானது எனக்கூறி கோவை மாநகர காவல்துறை பிரதமரின் இந்த வாகன பேரணிக்கு அனுமதி மறுத்திருந்தது.

தொடர்புடைய செய்தி