தமிழகத்தில் இளைஞர்களிடையே கஞ்சா போதை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை ஒத்தக்கடையில் பாரதி நகர் பகுதியில் இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில் தெருவில் வாகனத்தில் வந்தவரை மறித்து, அவரை சரமாரியாக தாக்கி, வாகனத்தையும் சேதப்படுத்தினர். பாதிக்கப்பட்டவருக்கு 20 தையல்கள் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.