நாம் தமிழர் கட்சி நிர்வாகி அடித்துக் கொலை.. குமரியில் பரபரப்பு!

66255பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார் (45). இவர் நேற்று மைலோடு புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை அலுவலகத்துக்குள் அடித்துக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். ஆலய பங்குத்தந்தை, அரசு வக்கீல் மற்றும் தி.மு.க ஒன்றிய செயலாளர் உட்பட 8 பேர் தலைமறைவாகி உள்ளனர். இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். உயிரிழந்த சேவியர் குமார் நாம் தமிழர் கட்சி தக்கலை ஒன்றிய செயலாளராக இருந்துள்ளார். இவரது கொலைக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி