நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடி - செல்வப்பெருந்தகை அட்டாக்

82பார்த்தது
நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடி - செல்வப்பெருந்தகை அட்டாக்
மீனவர்கள் பிரச்சனையில் மோடியின் நிலைப்பாடு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழக மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது. மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கிற தொழிலை செய்வதற்கு குறைந்தபட்ச பாதுகாப்பு தர முடியாத பிரதமர் மோடி, தமிழக மீனவர்களுக்காக பரிந்து பேசுவதை விட ஒரு துரோகச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி