காரில் வந்து 16 ஆடுகளை திருடிய பாஜக நிர்வாகி கைது

84பார்த்தது
காரில் வந்து 16 ஆடுகளை திருடிய பாஜக நிர்வாகி கைது
கொடைக்கானல் கீழ்மலை பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (38) இறைச்சி கடை வைத்துள்ள நிலையில் பாஜக நிர்வாகியாக இருக்கிறார். இவர் கடந்த செப். 27ஆம் தேதி அரவக்குறிச்சியில் பாஜக கொடிக் கட்டிய காரில் நண்பர்களுடன் சென்று 16 ஆடுகளை திருடியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் ரஞ்சித்குமார் மற்றும் அவரின் இரண்டு நண்பர்களை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி