காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற எண்ணிக்கைகளை இப்போது நாங்கள் சொல்லப்போவது இல்லை. ஆனால், தேர்தலின் போக்கு 'இந்தியா' கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. நாட்டின் ஒரு பகுதியில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் இதே நிலைதான் இருக்கிறது. பா.ஜ.க. வேட்பாளர்கள் உற்சாகத்தை இழந்துள்ளனர். பா.ஜ.க. பலமாக இருந்த இடங்களிலும் தற்போது அவர்களுக்கு ஆதரவு குறைந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது. ஜூன் 4-ந்தேதி ஆட்சிமாற்றம் ஏற்படப்போகிறது என காங்கிரசின் சசி தரூர் எம்.பி கூறியுள்ளார்.