பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து தான் இயக்கிய முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார் இயக்குநர் அட்லி. இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக வசூல் ஈட்டி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் மீண்டும் பாலிவுட் பக்கம் வந்துள்ள அட்லி, அடுத்து சல்மான் கானை வைத்து படம் இயக்க இருக்கிறார். அட்லி சொன்ன கதை சல்மான் கானுக்குப் பிடித்துப் போக அவர் உடனே ஓகே சொல்லி விட்டாராம். சல்மான் கான் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘சிக்கந்தர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த வருடம் அட்லி- சல்மான் கான் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறதாம்.