ரயில் விபத்து நடந்த இடத்திற்கு பைக்கில் சென்ற அமைச்சர் (Video)

562பார்த்தது
மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த கஞ்ஜன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். “இந்த விபத்து துரதிஷ்ட வசமானது எனவும் மேற்கு வங்க ரயில் விபத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் நடைபெறுவதாகவும்” ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த நிலையில் விபத்து நடைபெற்ற பகுதியை இருசக்கர வாகனத்தில் சென்று அவர் பார்வையிட்டார்.

நன்றி: News 18 Tamilnadu

தொடர்புடைய செய்தி