நடிகர் அரவிந்த் சாமி வழக்கு.. நீதிபதி உத்தரவு

74பார்த்தது
நடிகர் அரவிந்த் சாமி வழக்கு.. நீதிபதி உத்தரவு
நடிகர் அரவிந்த் சாமிக்கு 35 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காதது தொடர்பான வழக்கு பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பார் முருகன் குமாருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பள பாக்கியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்கவில்லை என அரவிந்த் சாமி வழக்கு தொடர்ந்தார். மேலும் சொத்து விவரங்களை தாக்கல் செய்து விட்டதாகவும், தனக்கு சொந்தமாக எந்த சொத்துக்களும் இல்லை எனவும் தயாரிப்பாளர் தரப்பில் பதில் சொத்து ஏதும் இல்லாவிட்டால் திவாலானவர் என அறிவித்து கைதை தவிர்க்கலாம் என நீதிபதி கூறியுள்ளார். சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாக கூறி, தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி