3வது திருமணம் செய்த ஆசாமி.. எதிர்பாராத திருப்பம்

10969பார்த்தது
3வது திருமணம் செய்த ஆசாமி.. எதிர்பாராத திருப்பம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள சமதர் பகுதியில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜிதேந்திர குமார் மற்றும் தீபா ஆகியோருக்கு பெரியவர்கள் கடந்த வியாழக்கிழமை(மே 23) திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து, திருமண விழாவுக்கு பின் விருந்தினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ​​வினிதா, பூஜா என்ற இரு பெண்கள் அங்கு வந்தனர். ஜிதேந்திராவின் முதல் மனைவி வினிதா, இரண்டாவது மனைவி பூஜா. அவர்களுடன் குழந்தைகளும் உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மணமகளின் உறவினர்கள் ஜிதேந்திராவை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி