'ரிமல் புயல்' கரையை கடந்தது

7344பார்த்தது
'ரிமல் புயல்' கரையை கடந்தது
வடக்கு வங்கக்கடலில் உருவான 'ரிமல் புயல்' மேற்குவங்கத்தின் சாகர் தீவு அருகே கரையைக் கடந்தது. இந்த நிலையில் 9 துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது.

இன்று (மே 27) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி