BREAKING: ஐபிஎல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி

12110பார்த்தது
BREAKING: ஐபிஎல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி
17வது ஐபிஎல் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 10.3 ஓவரில் 2 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டி, 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

தொடர்புடைய செய்தி