தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

11152பார்த்தது
தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மாலை 05:30 மணி அளவில் ‘ரீமல்’ புயல் வலுப்பெற்று, இன்று (27-05-2024) காலை 05:30 மணி அளவில் “தீவிர புயலாக” வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இன்று (27-05-2024) நள்ளிரவு, வங்க தேச-கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம்-சாகர்தீவிற்கும் இடையே, வங்கதேச-மங்லாவிற்கு அருகில் கரையை கடக்கக்கூடும். இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி