மீண்டும் புரட்டிப்போட்ட வெள்ளம்.. 15 பேர் பலி

71பார்த்தது
ஆப்கானிஸ்தானில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. அங்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பல கட்டிடங்கள் மற்றும் வேளாண் பயிர்கள் நாசமாயின. வடகிழக்கு பகுதிகளில் படாக்ஷான் மற்றும் பாக்லான் மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. படக்ஷானின் தலைநகர் பைசாபாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கடந்த 24 மணி நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி