மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் ஆனி ஊஞ்சல் உற்சவம் வருகிற ஜூன் 12ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாள் தோறும் சாயரட்சை பூஜைக்கு பிறகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளாக சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதியில் உள்ள 100 கால் மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருள்வர்.
அதன்படி ஆனி மாத பௌர்ணமி நாளின் (ஜூன் 21) உச்சிகால வேளையின் போது மூலவர் சொக்கநாதப் பெருமானுக்கு மா, பாலா, வாழை ஆகிய முக்கனிகளின் சாறை கொண்டு அபிஷேகம் நடைபெற உள்ளது. ஊஞ்சல் உற்சவ நாளில் உபய திருக்கல்யாணம் தங்க ரத உலா ஆகியன நடைபெறாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.