முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்

50பார்த்தது
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தப்பா நடத்தி வரும் செஞ்சுரிஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.23 லட்சம் பிஎஃப் தொகை வழங்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்ததையடுத்து பெங்களூரு பிஎஃப் மண்டல ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உத்தரவில் பிஎஃப் மண்டல ஆணையர் கோபால் ரெட்டி பிடிவாரண்ட் பிறப்பித்து தேவையான நடவடிக்கை எடுக்க புலகேசிநகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி