ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சம்போ செந்திலுக்கு தொடர்பு என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (ஜூலை 17) கைது செய்யப்பட்ட ஹரிஹரன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சம்போ செந்திலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சம்போ செந்தில் கொடுத்த பணத்தில் ஹரிஹரன் மூலமாக ரூ.4 லட்சம் வழக்கறிஞர் அருளுக்கு கை மாறியுள்ளது. ஹரிஹரனின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் மலர்கொடியின் வங்கிக் கணக்கிற்கு மாறியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.